• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-05-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கைத்தொழில் கண்காட்சி வாரமொன்றைப் பிரகடனப்படுத்துதல்
– தற்போது 28 சதவீதமாகவுள்ள மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான கைத்தொழில் துறையின் பங்களிப்பினை 30 சதவீதமாகவும் தற்போது 15 சதவீதமாகவுள்ள மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான உற்பத்திக் கைத்தொழிலின் பங்களிப்பினை 25 சதவீதமாகவும் 2030 ஆம் ஆண்டளவில் அதிகரிப்பதற்கு தேவையான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதே போன்று தற்போது 2.8 சதவீதமான தொழில்முயற்சியாளர்களின் நூற்று வீதத்தை 10 சதவீதம் வரையும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்களின் பங்களிப்பினை 52 சதவீதத்திலிருந்து 70 சதவீதம் வரையும் 2030 ஆம் ஆண்டளவில் அதிகரிப்பதற்கும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்த குறியிலக்குகளை அடைவதற்கு ஆறு (06) கைத்தொழில் துறைகள் இனங்காணப்பட்டுள்ளதோடு, இந்த துறைகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும் அதேபோன்று ஏனை வசதிகளையும் வழங்குவதற்கு கூட்டு அணுகு முறையினை உறுதிப்படுத்துவதற்கு கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கிணங்க, கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு உள்நாட்டு கைத்தொழில் மேம்பாட்டினை ஊக்குவிப்பதற்கும் கட்டியெழுப்புவதற்கும் அதேபோன்று வௌிநாட்டு முதலீட்டாளர்களையும் கைத்தொழிலாளர்களையும் ஈர்ப்பதனை நோக்காகக் கொண்டு வருடாந்தம் கைத்தொழில் கண்காட்சி வாரமொன்றை நடாத்துவதற்கும் அதன் ஆரம்ப நடவடிக்கையாக குறித்த கண்காட்சியை இந்த ஆண்டின் யூன் மாதம் 22 ஆம் திகதியிலிருந்து 25 ஆம் திகதிவரை நடாத்துவதற்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.