• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-05-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசுடமை தொழில்முயற்சிகளுக்கான மறுசீரமைப்புக் கொள்கை
- அரசுடமை தொழில் முயற்சிகளை மறுசீரமைப்பதற்குத் தேவையான வழிகாட்டல்களையும் ஒத்துழைப்பினையும் வழங்குவதற்கு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் அரசாங்க தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு பிரிவைத் தாபிக்கும் பொருட்டு 2022‑09‑05 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கிணங்க அரசுடமை தொழில்முயற்சிகளினால் வழங்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம், விலை மற்றும் பெறுதலை விருத்தி செய்தல், குறித்த தொழில்முயற்சிகளின் மூலம் பொது திறைசேரிக்குள்ள நிதி தாக்கத்தினை நீக்குதல் உட்பட தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்கு போட்டி மற்றும் சந்தையினை அடிப்படையாகக் கொண்ட வர்த்தக சூழலொன்றை உருவாக்குதல் என்பவற்றை நோக்காகக் கொண்டு அரசுடமை தொழில்முயற்சிகளுக்கான மறுசீரமைப்புக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு அரசுடமை தொழில்முயற்சிகளுக்கான மறுசீரமைப்பு தொடர்பில் தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.