2023-05-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேயிலை, இறப்பர் மற்றும் தென்னந்தோட்டங்கள் (துண்டாடுதலைக் கட்டுப்படுத்துதல்) சட்டத்தை திருத்துதல் – ஒரு ஏக்கர் அல்லது அதற்கு குறைந்த தென்னங்காணிகளை மாத்திரம் துண்டாடுவதற்கு இயலுமாகும் வகையில் வரையறைகளை விதித்து தற்போது நடைமுறையிலுள்ள சட்ட ஏற்பாடுகளைத் திருத்துவதற்கான பிரேரிப்பொன்று மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் 2023 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டது. இதற்கிணங்க, ஏற்பாடுகளைச் செய்வதற்காக தேயிலை, இறப்பர் மற்றும் தென்னந்தோட்டங்கள் (துண்டாடுதலைக் கட்டுப்படுத்துதல்) சட்டத்தை திருத்துவதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுப்பதற்காக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |