• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-05-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புதிய அரசாங்க நிதி முகாமைத்துவ சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்
– 2003 ஆண்டின் 3 ஆம் இலக்க நிதி முகாமைத்துவ (பொறுப்புகள்) சட்டம் மற்றும் இந்த சட்டத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தங்களின் கீழ் அரசாங்க நிதி செயற்பாடுகள் நிர்வகிக்கப்படுகின்றன. விசேட சந்தர்ப்பங்களில் பாராளுமன்ற அங்கீகாரத்தின் மீது மாத்திரம் குறித்த அரசாங்க நிதி நியதிகளுக்கு முரணாக செயற்படுவதற்கு சட்டத்தின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் குறித்த நியதிகளிலிருந்து விலகுவதற்கான ஏற்பாடுகள் சட்டத்தில் உள்வாங்கப்படவில்லை. அதேபோன்று சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் விதித்துரைக்கப்பட்டுள்ள குறியிலக்குகளை பூர்த்திசெய்ய முடியாத சந்தர்ப்பங்களில் அது தொடர்பில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளும் சட்டத்தில் திட்டவட்டமாக குறிப்பிடவில்லை. இந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு சர்வதேச நாணயநிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிகள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் புதிய அரசாங்க நிதி முகாமைத்துவ சட்டமொன்றை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க, 2025 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்துடன் நடைமுறைக்கு வரும் விதத்தில் புதிய அரசாங்க நிதி நியதிகளை தாபிப்பதற்கு இயலுமாகும் வகையில் புதிய அரசாங்க நிதி முகாமைத்துவ சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் இதற்கு ஒருங்கிணைவாக 2003 ஆண்டின் 3 ஆம் இலக்க நிதி முகாமைத்துவ (பொறுப்புகள்) சட்டத்தை நீக்குவதற்கும் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.