• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-05-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தப்படும் காவறை வசதிகளை அறிமுகப்படுத்துதல்
- நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்கள் 2023 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தினை முன்வைத்து நாடு தழுவிய ரீதியில் அரசாங்க வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் காவறை வசதிகளை விரிவுபடுத்துவது சம்பந்தமாக செய்யப்பட்ட முன்மொழிவானது பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டது. தற்போது தேசிய காப்புறுதி நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் மூலம் அரசாங்க ஊழியர்களுக்கும் ஓய்வுதாரர்களுக்கும் சுகாதார காப்புறுதி காப்பீட்டினை (அக்கிரஹார) வழங்கியுள்ளதோடு, மேலும் கணிசமான அளவு பொது மக்கள் வேறு சுகாதார காப்புறுதி திட்டங்களின் மூலம் காப்பீட்டினைப் பெற்றுள்ளனர். அதேபோன்று அரசாங்க சுகாதார சேவை முறைமையில் மேலதிக வசதிகளுக்காக தனிப்பட்ட வகையில் நிதி செலுத்தி குறித்த வசதிகளை பெற்றுக் கொள்வதற்கு சிலர் விருப்பத்துடன் உள்ளனர். இதற்கிணங்க, இலங்கை குடிமக்களுக்கும் அதேபோன்று வௌிநாட்டவர்களுக்கும் அரசாங்க வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் காவறை வசதிகளை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.