• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-05-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சமூக பாதுகாப்பு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
– சமூகத்தில் மிகவும் பாதிப்படையக்கூடிய குழுக்களை பாதுகாப்பதற்கு பலம்மிக்க சமூக பாதுகாப்பு வலையமைப்பொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பது சர்வதேச நாணயநிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிகள் நிகழ்ச்சித்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள செயற்பாடுகளில் முக்கிய செயற்பாடொன்றாக இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, திட்டமிடப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு கருத்திட்டத்திற்கு ஒத்தாசை நல்கும் பொருட்டு 200 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன் தொகையொன்றை வழங்குவதற்கு உலக வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. குறியிலக்காக கொள்ளப்பட்ட குடும்பங்களுக்கு நிதி நிவாரணங்களை வழங்குதல், வறுமை மற்றும் பாதிப்படையக்கூடியவர்களுக்கான வாய்ப்பினை அதிகரிக்கும் முன்னோடி நிகழ்ச்சித்திட்டம் மற்றும் சமூக பாதுகாப்பு முறைமையை பலப்படுத்தல் ஆகிய மூன்று (03) ஆக்ககூறுகளின் கீழ் உத்தேச கருத்திட்டமானது நடைமுறைப்படுத்தப்படும். இதற்கிணங்க குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் இதன் பொருட்டு நிதி ஏற்பாடு செய்வதற்காக உலக வங்கியுடன் கடன் இணக்கப்பேச்சுக்களை நடாத்துவதற்கும் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரும் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சருமாக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.