2023-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அங்கீகரிக்கப்பட்ட திறைசேரி உண்டியல் வழங்கல் வரையறையினைத் திருத்துதல் – 2022 நவெம்பர் மாதம் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திறைசேரி உண்டியல் வழங்கல் வரையறை 5,000 பில்லியன் ரூபாவாகும். 2023 மார்ச் மாத இறுதியில் செலுத்தவுள்ள மொத்த திறைசேரி உண்டியல் நிலுவை 4,636 பில்லியன் ரூபாவாகும். 2023 ஆம் ஆண்டு சார்பில் 4,979 பில்லியன் ரூபா கொண்ட மொத்த கடன் எடுத்தல் வரையறை சார்பில் பாராளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. இதிலிருந்து 3,526 பில்லியன் ரூபா உள்நாட்டு வளங்கள் மூலமும் 1,453 பில்லியன் ரூபா வௌிநாட்டு வளங்கள் மூலமும் பெற்றுக் கொள்வதற்கு மதிப்பிடப்பட்டுள்ளது. உள்நாட்டு கடன் பிரதானமாக திறைசேரி உண்டியல் மற்றும் திறைசேரி முறிகள் என்பவற்றை வழங்குவதன் மூலம் பெற்றுக் கொள்ளப்படும். இதற்கிணங்க, திறைசேரி உண்டியல் வழங்குதற்காக நடைமுறையிலுள்ள உச்ச எல்லையைத் திருத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அங்கீகரிக்கப்பட்ட திறைசேரி உண்டியல் வழங்கல் வரையறையினை 6,000 பில்லியன் ரூபா வரை அதிகரிப்பதற்கும் இதன் பொருட்டு பாராளுமன்ற பிரேரணையொன்றைச் சமர்ப்பிப்பதற்குமாக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |