2023-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் லக்ஸ்செம்பேர்க் கிரான்ட் டச் பிராந்தியத்தின் ஐரோப்பிய மற்றும் வௌிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சுக்கும் இடையிலான இருதரப்பு ஆலோசனைகள் பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கை - வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் லக்ஸ்செம்பேர்க் கிரான்ட் டச் பிராந்தியத்தின் ஐரோப்பிய மற்றும் வௌிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சுக்கும் இடையில் இருதரப்பு ஆலோசனைகள் பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையின் மூலம் இருதரப்பு ஒத்துழைப்பு சார்ந்த அரசியல், பொருளாதார, வர்த்தக, விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் கலாசார துறைகள் அடங்கலாக இரு நாடுகளுக்கும் இடையில் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கைக்கும் லக்ஸ்செம்பேர்க்கிற்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை தாபித்து 50 வருடம் நிறைவுசெய்வதன் முகமாக இரு நாடுகளினதும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்கள் மட்டத்தில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |