• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுங்க விவகாரங்கள் தொடர்பில் பரஸ்பர ஒத்துழைப்பு சார்பில் அவுஸ்திரேலியா எல்லை படையணிக்கும் இலங்கை சுங்கத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
– சுங்க கையாள்கை நடவடிக்கைகளுக்குரியதாக இரு தரப்புக்கும் இடையில் ஒத்துழைப்பினை ஏற்படுத்திக்கொள்ளும் நோக்கில் இலங்கை சுங்கத்துக்கும் அவுஸ்திரேலியா எல்லை படையணிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு உடன்பாடு காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இரு நாடுகளிலும் நடைமுறையிலுள்ள சட்டங்கள், ஒழுங்குவிதிகள், நடவடிக்கை முறைகள் மற்றும் கொள்கைகளின் கீழ் சுங்க விவகாரங்கள் தொடர்பில் பரஸ்பர ஒத்துழைப்பை பலப்படுத்துதல், மேம்படுத்துதல் மற்றும் விருத்தி செய்தல் என்பன உத்தேச உடன்படிக்கையின் நோக்கமாகும். வரைவு உடன்படிக்கைக்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கிணங்க குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.