• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-04-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிதி துறை பாதுகாப்பு வலையமைப்பு கருத்திட்டம் சர்பில் உலக வங்கியிடமிருந்து நிதியினைப் பெற்றுக் கொள்ளல்
– இலங்கை நிதி துறை பாதுகாப்பு வலையமைப்பு கருத்திட்டத்தின் கீழ் இலங்கை வைப்பு காப்புறுதி மற்றும் திரவ உதவி நிதியம் சார்பில் உலக வங்கியின் கடன் வசதிகளைப் பெற்றுக் கொள்ளும் சாத்தியம் பற்றி இந்த வங்கியுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. ஸ்திரத்தன்மையைப் பேணுதல் மற்றும் சாதகமான நிதி இடைநிலை வழிமுறையினை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இயலுமாகும் வகையில் நிதித் துறையின் பலம் மற்றும் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை நிதித்துறை பாதுகாப்பு வலையமைப்பின் மற்றும் நிறுவன இயலளவை பலப்படுத்தும் பொருட்டு உத்தேச கடன் தொகையைப் பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிணங்க நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, முதலீட்டுக் கருத்திட்ட நிதியிடலாக 150 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை கொண்ட கடன் தொகையொன்றை உலக வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்ளும் பொருட்டு தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கு கொள்கை ரீதியிலான அங்கீகாரத்தினை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.