• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-04-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்கு உலக வங்கியின் அபிவிருத்திக் கொள்கை நிதியிடல் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்ளல்
- சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிகள் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக இலங்கை அரசாங்கத்தினால் பேரின பொருளாதார சவால்களுக்கு தீர்வுகளை வழங்கும் நோக்கில் தேவையான மறுசீரமைப்புடன் விரிவான பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் மீள் கட்டமைப்பு நிகழ்ச்சித்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு அதன் அபிவிருத்தி கொள்கை நிதியிடல் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் ஒத்துழைப்பினை வழங்குவதற்கு உலக வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க பொருளாதார நிர்வாக மாற்றம், அபிவிருத்தி, போட்டியினை விருத்தி செய்தல் மற்றும் வறுமை, ஆபத்துக்கு ஆளானவர்களை பாதுகாத்தல் போன்ற மூன்று பிரதான துறைகளின் மீது உலக வங்கி அதன் ஒத்தாசையினை வழங்கும். உத்தேச நிகழ்ச்சித்திட்டத்தின் மொத்த ஒருங்கிணைப்பு செயற்பாடுகள் சனாதிபதி செயலகத்தினால் மேற்கொள்வதற்கும் உரிய நிதியினைப் பெற்றுக் கொள்வதற்குரியதாக உலக வங்கியுடன் கலந்துரையாடுவதற்கு வௌிநாட்டு வளங்கள் திணைக்களத்திற்கு அதிகாரத்தினை கையளிப்பதற்கும் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.