2023-04-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டிற்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளல் - சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை 2023‑03‑22 ஆம் திகதியன்று 48 மாத காலம் சார்பில் சிறப்பு எடுப்பனவு உரிமை 2.29 பில்லியன் (அண்ணளவாக 3 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள்) பெறுமதி கொண்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதியினை இலங்கை சார்பில் அங்கீகரித்துள்ளதோடு, நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சினால் இதற்கான வாக்குறுதிச் சீட்டினை வழங்கியுள்ளது. இந்த நிதி வசதி மற்றும் ஏனைய உரிய ஆவணங்கள் 2023‑03‑22 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளதோடு இந்த வசதி சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் இந்த கடன் வசதிக்குரிய பிரதான கொள்கை நடவடிக்கைகளை சட்டத்தில் உள்வாங்கும் பொருட்டு தேவையான நடவடிக்கையினை எடுப்பதற்கு பாராளுமன்ற அங்கீகாரம் பெறவேண்டியுள்ளது. இதற்கிணங்க சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டிற்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிக சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |