• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-04-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொதுமக்கள் சுதந்திரமாக காலத்தை கழிப்பதற்காக மாத்திரம் காலிமுகத்திடலை ஒதுக்குதல்
– சமூக பொறுப்பு கருத்திட்டமொன்றாக காலிமுகத்திடலை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை துறைமுக அதிகாரசபை பொறுப்பேற்றுள்ளதோடு, இதுவரை மேற்கொள்ளப் பட்டுள்ள அபிவிருத்தி நோக்கங்களுக்கு இந்த அதிகாரசபை சுமார் 220 மில்லியன் ரூபாவை செலவு செய்துள்ளது. கடந்த போராட்ட காலப் பகுதியில் ஏற்பட்ட சொத்துக்களுக்கான சேதம் தொடர்பில் திருத்த வேலைகளுக்கு மாத்திரம் 6.6 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் சுதந்திரமாக காலத்தை கழிப்பதற்கு இயலுமாகும் வகையில் இந்த பிரதேசத்தை பேணவேண்டும். ஆயினும் இசை நிகழ்ச்சிகள் உட்பட பொதுமக்கள் பாரிய அளவில் ஒன்றுகூடும் பிற செயற்பாடுகள் காரணமாக இந்த பிரதேசத்திற்கு அடிக்கடி சேதம் ஏற்படுவதோடு, இந்த பிரதேசத்தை எழில் மிக்கதாக வேணுவதற்கு கடினமாகியுள்ளது. ஆதலால், 2023‑04‑20 ஆம் திகதி தொடக்கம் செயல்வலுவுக்கு வரத்தக்கதாக சமய நடவடிக்கைகள் தவிர காலிமுகத்திடலின் எழிலை பாதிக்கும் அல்லது சேதம் விளைவிக்கும் இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் அல்லது பிற நடவடிக்கைகளுக்காக காலிமுகத்திடலை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்காமலிருப்பதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.