2023-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை மின்சார சபையின் தெஹிவளை திறன் அளவிடல் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் – ஆரம்பத்தில் தெஹிவளை பிரதேசத்தில் சுமார் 50,000 நுகர்வோர்களை குறியிலக்காகக் கொண்டு திறன் அளவிடல் முறைமையினை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பொருட்டு மதிப்பிடப்பட்ட செலவு 1,000 மில்லியன் ரூபாவாகும். இதன் பொருட்டு உட்கட்டமைப்பு வசதிகளை திட்டமிடுதல், வழங்குதல், நிறுவுதல், பரிசோதித்தல் மற்றும் ஆரம்பித்தல் என்பன சார்பில் சர்வதேச ரீதியில் போட்டி கேள்வி முறையின் கீழ் கேள்வி கோரப்பட்டுள்ளதோடு, ஐந்து விலைமனுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு ஆகக்கூடிய அனுசரணையான விலை முன்வைப்பினை செய்துள்ள சீனாவின் M/s. Yantai Dongfang Wisdom Electric Co. Ltd. நிறுவனத்திற்கு 937.91 மில்லியன் ரூபா கொண்ட தொகைக்கு உரிய பெறுகை ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |