• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2022/2023 பெரும் போகத்திற்கான அரசாங்க நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டம்
– 2 மில்லியன் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் சார்பில் குடும்பம் ஒன்றுக்கு மாதமொன்றில் அரிசி 10 கிலோகிராம் வீதம் இரண்டு மாத காலத்திற்கு வழங்கும் பொருட்டு 2023‑01‑16 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. குறித்த 2 மில்லியன் குடும்பங்களுக்கு மேலதிகமாக காத்திருப்பு பட்டியலில் மேலும் சுமார் 850,000 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் உள்ளதெனவும் குறித்த எண்ணிக்கையையும் உத்தேச நிவாரண நிகழ்ச்சித்திட்டத்தில் உள்வாங்குவது பொருத்தமானதெனவும் இனங்காணப் பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் குறித்த 850,000 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களையும் உள்ளடக்கி 2.85 மில்லியன் குடும்பங்களுக்கு மாதமொன்றில் அரிசி 10 கிலோகிராம் வீதம் இரண்டு மாத காலத்திற்கு வழங்குவதற்கும் இதன் பொருட்டு ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ள 10 பில்லியன் ரூபா கொண்ட வரவுசெலவுத்திட்ட நிதி ஏற்பாட்டினை 13 பில்லியன் ரூபா வரை அதிகரிப்பதற்குமாக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.