• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2023 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க மத்தியஸ்த சபைகள் விசேட வகையிலான பிணக்குகள் (மத்தியஸ்தம் செய்வோரின் தகைமைகள்) கட்டளை
- 2023 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க மத்தியஸ்த சபைகள் (விசேட வகையிலான பிணக்குகள்) சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் நீதி அமைச்சரினால் 2021‑12‑21 ஆம் திகதியன்று அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளையின் மூலம் நிதி வர்த்தக கொடுக்கல் வாங்கல்களின் மூலம் எழும் நிதி பிணக்குகளை தீர்ப்பதற்கு ஆறு நிர்வாக மாவட்டங்களில் விசேட மத்தியஸ்த சபைகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று இத்தகைய நிதி சபைகளுக்கு நியமிக்கப்படுபவர்களின் தகைமைகளை நிர்ணயிப்பதற்கான அதிகாரம் 2003 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க மத்தியஸ்த சபைகள் (விசேட வகையிலான பிணக்குகள்) சட்டத்தின் 4(2) ஆம் பிரிவின் மூலம் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சருக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 2023‑01‑14 ஆம் திகதியிடப்பட்டதும் 2314/80 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க மத்தியஸ்த சபைகள் விசேட வகையிலான பிணக்குகள் (மத்தியஸ்தம் செய்வோரின் தகைமைகள்) கட்டளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.