• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேயிலை சக்தி நிதியத்தின் பங்குதாரர்களிடமிருந்து தேயிலை சக்தி நிதியத்திற்கு பங்குகளை மீள் கொள்வனவு செய்தல்
- தேயிலை சக்தி நிதியத்தின் பங்குதாரர்களிடமிருந்து குறித்த பங்குகளை மீண்டும் தேயிலை சக்தி நிதியத்திற்காக கொள்வனவு செய்வது தொடர்பிலுள்ள பிரேரிப்பு சம்பந்தமாக 2022‑09‑22 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. அதன் போது முதலில் இந்த பிரேரிப்பு சம்பந்தமாக தேயிலை சக்தி நிதியத்திற்குரிய பணிகள் தொடர்பில் தீர்மானிப்ப தற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் சிபாரிசுகளைப் பெற்றுக் கொள்ளவேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது. இக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு பங்கொன்றின் பேரளவு பெறுமதியான 10/- ரூபாவை மீளச் செலுத்தி குறித்த பங்கு உரிமைகளை தேயிலை சக்தி நிதியத்திற்கு உடைமையாக்கிக் கொள்வதற்கும் இதன் பொருட்டு தேயிலை சக்தி நிதியத்தினால் ஈட்டப்பட்ட நிதியினை பயன்படுத்துவதற்குமாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.