2023-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை – 2030 ஆம் ஆண்டு மொத்த மின்சார தேவையின் 70 சதவீதம் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலமாக பெற்றுக் கொள்தல், வலுசக்தி விநியோகம் சம்பந்தமாக சுயாதீனமாக இருத்தல் மற்றும் 2050 ஆம் ஆண்டளவில் காபன் வௌியேற்றத்தை கட்டுப்படுத்திய நிலைக்கு ஆளாதல் என்பன அரசாங்கத்தினால் கொள்கையாக வௌிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடையும் நோக்கில் இந்திய இலங்கை தனியார் மற்றும் அரசாங்கத் துறை சார்ந்த தொழில்முயற்சியாளர்களினால் கூட்டாக வடக்கு மற்றும் கிழக்கு மகாணங்கள் அடங்கலாக இலங்கையில் பரஸ்பரம் உடன்பாடு காணப்பட்ட இடங்களில் சூரியசக்தி, கரையோர காற்று உட்பட காற்றினை பயன்படுத்தி வலுசக்தி உற்பத்தி மற்றும் உயிர்வாயு சார்ந்த வலுசக்தி உற்பத்தி கருத்திட்டங்கள் மற்றும் அனுப்பீட்டு உட்கட்டமைப்பு வசதிகள் என்பவற்றை இணைந்து மேற்கொள்தல் அத்துடன் / அல்லது எளிதாக்குதல் மூலம் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையின் ஒத்துழைப்பினை மேம்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் இந்திய குடியரசு அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது இந்திய குடியரசிற்கும் இலங்கை குடியரசின் அரசாங்கத்திற்கும் இடையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறைசார் ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையினை செய்து கொள்ளும் பொருட்டு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |