2023-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பிரதி பொலிஸ்மா அதிபர் பிரிவு எல்லைகளை நிர்ணயித்தல் - மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் 09 ஆவது பாராளுமன்றத்தின் 04 ஆவது கூட்டத்தொடரை ஆரம்பித்து முன்வைத்த கொள்கை பிரகடனத்தில் நடைமுறையிலுள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் பிரிவு எல்லைகளை தற்போதுள்ள மாகாண எல்லைகளுக்கு அமைவாக இல்லாமையினால் உருவாகும் நடைமுறை பிரச்சினைகள் மற்றும் நிர்வாகத்தின் போது ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்கும் பொருட்டு மாகாண ரீதியில் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரிவு எல்லைகளை நிர்ணயிக்கும் தேவை சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கிணங்க பிரதி பொலிஸ்மா அதிபர் பிரிவு எல்லைகளை நிர்ணயிப்பதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் தலைமையில் உத்தியோகத்தர்கள் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் சம்பந்தமாக அமைச்சரவையின் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. |