2023-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தர உத்தரவாத மற்றும் அங்கீகார ஆணைக்குழுவை தாபிப்பதற்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளல் – உயர் கல்வி (தர உத்தரவாத மற்றும் அங்கீகார) சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக 2019‑04‑02 ஆம் திகதியன்று அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும் குறித்த சட்டமூலத்தை அச்சந்தர்ப்பத்தில் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கமுடியாமற் போயுள்ளது. குறித்த சந்தர்ப்பத்தில் இந்த சட்டமூலத்திற்கு குழுநிலை சந்தரப்பத்தில் முன்வைப்பதற்கு சட்மான அதிபரினால் பிரேரிக்கப்பட்டிருந்த சில திருத்தங்கள் மற்றும் அதன் பின்னர், பல்வேறுபட்ட தரப்பினர்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அவதானிப்புரைகளையும் பிரேரிப்புகளையும் ஆராய்ந்ததன் பின்னர, புதிய ஏற்பாடுகளை உள்ளடக்கி சட்டவரைநரினால் வரையப்பட்டுள்ள உயர் கல்வி (தர உத்தரவாத மற்றும் அங்கீகார) சட்டமூலத்தை மேலும் திருத்துவது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க புதிய சட்டமூலமொன்றை தயாரிப்பதற்காக சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்காக கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |