2023-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வீதி பராமரிப்பு நிதியத்தைத் தாபித்தல் - 2023 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தை முன்வைத்து மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் வீதிப் பராமரிப்பு நிதியமொன்றை தாபிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளதோடு, அதன் பொருட்டு 100 மில்லியன் ரூபா கொண்ட ஆரம்ப நிதி ஏற்பாட்டினை ஒதுக்குவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த நிதியத்தைத் தாபித்து நடாத்திச் செல்வதற்கு பொருத்தமான வழிமுறையொன்றை தயாரிக்கும் பொறுப்பானது போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு உத்தேச நிதியத்தை பாராளுமன்ற சட்டத்தின் மூலம் தாபிப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |