• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-03-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2023-2026 காலப்பகுதியில் விரிவாக்கப்பட்ட நிதி வசதி பெற்றுக்கொள்ளல்
- பேரின பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் கடன் நிலைபேறான தன்மை, நிதி உறுதிப்பாட்டை பாதுகாத்தல், பாதிப்படையக்கூடிய மக்களை பாதுகாத்தல், கட்டமைப்பு ரீதியிலான மறுசீரமைப்புக்களை துரிதப்படுத்தல், ஊழலை ஒழித்தல் மற்றும் இலங்கையில் காணப்படுகின்ற விருத்திக்கான ஆற்றல் வளங்களை கண்டறிதல் போன்றவற்றை நோக்காகக் கொண்டு, இலங்கை பொருளாதார கொள்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்கும் பொருட்டு சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிகளின் கீழ் 48 மாத வேலைத்திட்டத்துக்காக  விசேட எடுப்பனவு உரிமை (SDR) மூலம் 2.3 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு சமனான கடன் வசதியினைப் பெற்றுக்கொள்வதற்கு 2022‑09‑01 ஆம் திகதி இலங்கை பதவியணி மட்டத்திலான உடன்படிக்கையினைச் செய்துகொண்டுள்ளது. இதற்கிணங்க 2023-2026 காலப்பகுதியில் வரவுசெலவுத்திட்ட நிதியிடலுக்காக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து குறித்த விரிவாக்கப்பட்ட கடன் வசதியினைப் பெற்றுக்கொள்வதற்கு உரிய ஏற்புடைய உடன்படிக்கைகளைச் செய்துகொள்வதற்காக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.