• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-03-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு உரித்தாக்கப்பட்டுள்ள நாவலபிட்டிய பஸ்பாகே கோரலையிலுள்ள ஹைன்போட் தோட்டக் காணியிலிருந்து வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவு போன்ற அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் காணித் துண்டுகளை வழங்குதல்
- கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரலை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள 566 ஏக்கர்கள் கொண்ட ஹைன்போட் தோட்டக்காணி காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, குறித்த காணியிலிருந்து 200 ஏக்கர் கொண்ட காணியினை வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர் களுக்கும் இத்தகைய அனர்த்தங்களுக்கு ஆளாகக்கூடிய அதிக ஆபத்தான வலயங்களில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கும் பொருட்டு சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.