• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-03-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தொழிநுட்ப தொழிற்கல்வி மற்றும் பயிற்சி துறையை பலப்படுத்துவதற்காக கொரியாவின் மனிதவள அபிவிருத்தி சேவைக்கும் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபைக்கும் இடையில் உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளல்
- இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ் இயங்கி வரும் நியாகம தேசிய தொழிற்பயிற்சி நிலையத்தை விருத்திசெய்வதற்கும் அதன் ஆற்றலை மேம்படுத்துவதற்குமாக 2.15 பில்லியன் கொரிய வொன்களை நன்கொடையாக வழங்குவதற்கு கொரியக் குடியரசின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சின் கீழ் செயற்படும் கொரியாவின் மனிதவள அபிவிருத்தி சேவைகள் உடன்பாடு தெரிவித்துள்ளது. உத்தேச கருத்திட்டத்தை 2023 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு (02) வருட காலத்திற்கு நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதோடு, அதற்காக கொரிய மனிதவள அபிவிருத்தி சேவைக்கும் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபைக்கும் இடையில் உடன்படிக்கையொன்றை செய்துகொள்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. உத்தேச வரைவு உடன்படிக்கைக்கு சட்டமா அதிபரின் உடன்பாடும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சினதும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தினதும் உடன்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கிணங்க உத்தேச உடன்படிக்கையினை கைச்சாத்திடும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.