• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-03-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் பற்றிய சட்டமூலம்
- மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சம்பந்தமான ஐக்கிய நாடுகளின் சமவாயத்திற்கு இலங்கை 2016 ஆம் ஆண்டில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த சமவாயத்தின் 04 ஆம் உறுப்புரைக்கமைவாக வலதுகுறைந்த காரணத்தினால் அத்தகைய ஏதேனும் பாகுபாடின்றி மாற்றுத்திறனாளிகளின் சகல மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரம் என்பவற்றை உறுதிப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் போன்றவற்றை அரசாங்கம் மேற்கொள்தல் வேண்டுமென்பதோடு, இது சம்பந்தமாக அடிப்படை வரைவினைத் தயாரிக்கும் பொருட்டு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அதற்கமைய, 1996 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க மாற்றுத்திறனாளிகள் உரிமைகளைப் பாதுகாத்தல் சட்டத்தை இல்லாதொழித்து புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் மேற்போந்த குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆரம்ப சட்டவரைவினை அடிப்படையாகக் கொண்டு குறித்த நோக்கம் கருதி புதிய சட்டமூலமொன்றை வரையும் பொருட்டு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்காகவும் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினாலும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.