• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-03-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிதித்துறை சார்ந்த பிரச்சினைகளை முகாமிக்கும் குழுவைத் தாபித்தல்
- அரசாங்க நிதி, கடன் மற்றும் கொடுப்பனவு நிலுவை பிரச்சினைகள் காரணமாக நிதி துறையின்பால் ஏற்படும் தாக்கத்தின் மீது நிதி நெருக்கடி உருவாவதை தவிர்த்துக் கொள்வதற்கும் அத்தகைய நிதி நெருக்கடி உருவானால் அதன் செலவினை குறைப்பது மிக முக்கியமானதாகும். அதற்கிணங்க தற்போது இலங்கை முகங்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடியின் மத்தியில் நெருக்கடியினை முகாமித்தல் மற்றும் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப தீர்மானங்களை எடுத்தல் என்பன மிக முக்கியமானதாகும். ஆதலால் இலங்கை மத்திய வங்கிக்கும் நிதி என்னும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சுக்கும் இடையில் நிதி துறை சார்ந்த பிரச்சினை தொடர்பிலுள்ள ஆயத்தம் மற்றும் முகாமை சம்பந்தமாகவும் அதேபோன்று அவர்களுடைய வகிபாகம் சம்பந்தமாகவும் ஒருங்கிணைக்கும் பொருட்டு நிதி துறை சார்ந்த பிரச்சினைகளை முகாமிக்கும் குழு மற்றும் நிதி துறை சார்ந்த பிரச்சினைகளை முகாமிக்கும் தொழிநுட்ப குழு ஆகியவற்றை தாபிப்பதற்கும் வங்கி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்திற்கு இதன் பொருட்டு தேவையான ஏற்பாடுகளை உள்ளடக்குவதற்கும் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.