2023-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
குற்றச் செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கும் மற்றும் பாதுகாக்கும் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல் - நடைமுறையிலுள்ள குற்றச் செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கும் மற்றும் பாதுகாக்கும் சட்டத்திற்குப் பதிலாக சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த தர நியமங்கள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றுவதற்கு இயலுமாகும் வகையில் மிகப் பொருத்தமான ஏற்பாடுகளை உள்ளடக்கி புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு 2021‑03‑08 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |