• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மின்னூட்டப்பட்ட மின்கலன்கள் மூலம் செயற்படுத்தப்படுகின்ற பேருந்துகளை போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கு முன்னோடி கருத்திட்டமொன்றை செயற்படுத்துதல்
- சர்வதேச வலுசக்தி நெருக்கடியின் மத்தியில் தொல்பொருள் எரிபொருள் இறக்குமதிக்கான செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையொன்றாக மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தோற்றுவாயொன்றான சூரியசக்தியைப் பயன்படுத்தி இயங்கக்கூடிய பேரூந்துகளை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதென தெரியவந்துள்ளது. இதற்கிணங்க, கொழும்பு வர்த்தக நகரம் மற்றும் கம்பஹா மாவட்டத்தை மையமாகக் கொண்டு, மேல்மாகாணத்தை உள்ளடக்கிய வகையில், இலங்கை போக்குவரத்து சபைக்கு மின்னூட்டப்பட்ட மின்கலன்கள் மூலம் செயற்படுத்தப்படுகின்ற பேரூந்துகளை போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்காக அரசாங்க ‑ தனியார் பங்குடமை கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பை கவனத்திற் கொண்டு முதலில் முறையான சாத்தியத்தகவாய்வொன்றின் அடிப்படையில் முன்னோடி கருத்திடமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.