• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுதல் தொடர்பான தேசிய கொள்கை
– ஆண் பெண் பாலினத்தில் காணப்படும் வேறுபாட்டினை குறைத்து பெண்களை வலுவூட்டும் பொருட்டு தேசிய கொள்கையொன்றை தயாரிப்பதற்கு 2022‑09‑05 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க உரிய சகல தரப்பினர்களினதும் பங்களிப்புடன் 08 தொனிப்பொருளின் கீழ் 'பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுதல் தொடர்பான தேசிய கொள்கை' தயாரிப்பட்டுள்ளது. இந்த கொள்கையை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.