• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொருட்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளையும் புலனாய்வுகளையும் துரிதப்படுத்துதல்
- இலங்கை சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் உட்பட பொருட்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணை, புலனாய்வு மற்றும் ஏனைய உரிய செயற்பாடுகளை பூர்த்தி செய்வதற்கு நீண்டகாலம் எடுக்கப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த பொருட்கள் சேதமடைதல் மற்றும் அழிவடைதல் உள்ளிட்ட பல பொருளாதார நட்டங்கள் ஏற்படுவதால், இத்தகைய பொருட்கள் தொடர்பில் இலங்கை சுங்கத் திணைக்களத்தால் பின்பற்றப்படும் நடைமுறையிலுள்ள செயற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டியுள்ளது. இதற்கிணங்க, குறித்த விடயங்களை ஆராய்ந்து, தேவையாயின் சுங்கக் கட்டளைச் சட்டத்திற்குச் செய்யப்படவேண்டிய திருத்தங்களை இனங்கண்டு, அதுதொடர்பாக அமைச்சரவைக்குப் சிபாரிசுகளைச் சமர்ப்பிக்கும் பொருட்டு பின்வரும் கட்டமைப்புடன் கூடிய அமைச்சர்கள் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் சம்பந்தமாக அமைச்சரவையின் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

* மாண்புமிகு நிமல் சிறிபால த சில்வா அவர்கள்
துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர்

* மாண்புமிகு (மருத்துவர்) ரமேஷ் பத்திரன அவர்கள்
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர்
கைத்தொழில் அமைச்சர்

* மாண்புமிகு ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்கள்
நிதி இராஜாங்க அமைச்சர்

* மாண்புமிகு திலும் அமுணுகம அவர்கள்
முதலீட்டு மேம்பாடு இராஜாங்க அமைச்சர்

* மாண்புமிகு ஷெஹான் சேமசிங்க அவர்கள்
நிதி இராஜாங்க அமைச்சர்