2023-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பங்களாதேஷுடன் செய்து கொள்ளப்படவுள்ள முன்னுரிமை வர்த்தக உடன்படிக்கை - பிராந்திய ரீதியாக பிரதான வர்த்தக தரப்பினர்களுடன் நிலவுகின்ற தொடர்புகளைப் பலப்படுத்துவதன் மூலம் சந்தைத் தடைகளை நீக்கி இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு சந்தை அணுகலுக்கான வாய்ப்புக்களை அதிகரித்தல், உள்நாட்டு விநியோகம் தொடர்பாக காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்களை மேலும் அதிகரித்தல் போன்ற நோக்கங்களை அடைவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கு ஒருங்கிணையாக இலங்கைக்கும் பங்களாதேசத்திற்கும் இடையில் முன்னுரிமை வர்த்தக உடன்படிக்கையைச் செய்துகொள்வதற்கு 2021‑06‑14 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பங்களாதேஷுடன் முன்னுரிமை வர்த்தக உடன்படிக்கையினைச் செய்துகொள்வதன் மூலம் நடைமுறையிலுள்ள வர்த்தக உடன்படிக்கைகளை விஞ்சி இருதரப்பு வர்த்தகங்களை மேலும் அதிகரிக்க முடியுமென இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சர்வதேச வர்த்தக அலுவலகத்தின் நெறிப்படுத்தலின் மீது பங்களாதேஷுடன் உத்தேச முன்னுரிமை வர்த்தக உடன்படிக்கை கலந்துரையாடல்களை துரிதப்படுத்தும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |