• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிலுவை பற்றுச் சீட்டுக்களைச் தீர்ப்பதற்காக பிணைகளை வழங்குதல்
- அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களினால் தீர்க்கப்படவேண்டியுள்ள கொடுப்பனவுகள் / செலுத்தப்படாத பற்றுச்சீட்டுக்கள் சம்பந்தமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாண்புமிகு சனாதிபதி அவர்களின் ஆலோசனையின் பேரில் திறைசேரியின் செயலாளரினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் அறிக்கையின் மூலம் சந்தை மற்றும் திறைசேரி நிதிப் பாய்ச்சல் தொழிற்பாட்டை இலகுபடுத்தும் வகையில் வழங்குநர்களுக்கும் / ஒப்பந்தக்காரர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய தொகையை பணமாக செலுத்துவதற்குப் பதிலாக திறைசேரி பிணைகளை வழங்குவதன் மூலம் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கிணங்க நடவடிக்கை எடுக்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.