2023-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய பாதுகாப்பு சபையை தாபிப்பதற்கான சட்டமூலம் - 1999 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் தேசிய பாதுகாப்பு சபையானது தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் சனாதிபதி அவர்களுக்கு ஆலோசனை வழங்குதல் அதேபோன்று இது தொடர்பில் உள்நாட்டு, வௌிநாட்டு பொருளாதார மற்றும் இராணுவக் கொள்கைகளை ஒருங்கிணைக்கும் அடிப்படை நிறைவேற்று நிறுவனமொன்றாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 2023‑01‑12 ஆம் திகதியன்று வழங்கப்பட்ட உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தேசிய பாதுகாப்பு சபையை நியதிச்சட்ட அடிப்படையிலும் தெளிவான கட்டமைப்புடன் கூடியதாக தாபிக்கும் தேவை சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கிணங்க, தேசிய பாதுகாப்பு சபையை பாராளுமன்ற சட்டமொன்றின் மூலம் சட்டபூர்வமாக்குவதற்கு இயலுமாகும் வகையில் சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்ட வரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |