• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-02-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அத்தியாவசிய சேவைகளையும் போக்குவரத்து வசதிகளையும் உறுதிப்படுத்தி இலங்கையில் சுகாதார துறையின் சுகாதார உபசரிப்பு சேவை வழங்குவதனை விருத்தி செய்யும் பொருட்டு யப்பான் பொருளாதார, சமூக அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கொடை
- தற்போது இலங்கையில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, யப்பான் பொருளாதார, சமூக அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அத்தியாவசிய மற்றும் அவசர சுகாதார சேவைகளை தடையின்றி நடாத்திச் செல்வதனை உறுதிப்படுத்தும் பொருட்டு எரிபொருள் (பிரதானமாக டீசல்) வழங்குவதற்காக 05 பில்லியன் யப்பான் யென் (அண்ணளவாக 38 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள்) கொண்ட கொடையொன்றை வழங்குவதற்கு யப்பான் அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. குறித்த கொடையினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு உரிய உடன்படிக்கைகளை செய்துகொள்வதற்கு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.