2023-02-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2022 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இலங்கை நீர் வானூர்தி நிலையங்கள் ஒழுங்குவிதிகள் – சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு காரணியாய் அமையும் மனம் கவரும் தொழில்முயற்சியொன்றாக 2000 ஆம் ஆண்டின் ஆரம்ப காலப்பகுதியில் இலங்கையில் மிதக்கும் விமானங்களின் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போது குறித்த நீர் வானூர்தி நிலைய செயற்பாடுகளில் தனியார் கம்பனியொன்று மாத்திரம் ஈடுபட்டுள்ளதோடு, எதிர்காலத்தில் இந்த துறை சார்ந்த பணிகளில் மேலும் நிறுவனங்கள் ஈடுபடலாம். ஆதலால் நீர் வானூர்தி நிலைய செயற்பாடுகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பொருட்டு இந்த பணிகளை ஒழுங்குறுத்தும் தேவை எழுந்துள்ளது. இதற்கிணங்க, சர்வதேச சிவில் விமான சேவைகள் சமவாயத்தின் கடப்பாடுகளுக்கு அமைவாக 2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க விமான சேவைகள் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் 2022 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இலங்கை நீர் வானூர்தி நிலையங்கள் ஒழுங்குவிதிகள் 2022‑08‑09 ஆம் திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வௌிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |