• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-02-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பங்களாதேஷ் - இலங்கை கூட்டு ஆலோசனை ஆணைக்குழுவைத் தாபிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
- இருநாடுகளுக்கிடையில் அரசியல், பொருளாதார, தொழிநுட்ப, மற்றும் விஞ்ஞான ரீதியிலான கொன்சியூலர் மற்றும் கலாச்சார ஒத்துழைப்புக்கள் அடங்கலாக இருதரப்பு உறவுகளை ஊக்குவித்தல், பலப்படுத்தல் மற்றும் விரிவாக்கம் செய்யும் நோக்கில் பங்களாதேஷ் - இலங்கை கூட்டு ஆலோசனை ஆணைக்குழுவை தாபிக்கும் பொருட்டு புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. தற்போதுள்ள இருதரப்பு ஒத்துழைப்புக்களிலுள்ள அனைத்து துறைகளையும் இருநாட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்களின் மட்டத்தில் மீளாய்வு செய்தல், மதிப்பீடு செய்தல் மற்றும் ஒத்துழைப்புக்கான புதிய துறைகளை ஆராய்தல் பொறிமுறையாக உத்தேச ஆலோசனை ஆணைக்குழு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். உத்தேச வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கிணங்க குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.