• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-02-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முறையான மீளாய்வின் மூலம் அரசாங்க செலவுகளை நியாயப்படுத்தல்
- அரசாங்க செலவுகளை நியாயப்படுத்தும் நோக்கில் பூச்சிய அடிப்படையிலான வரவுசெலவுத்திட்ட முறையினை அறிமுகப்படுத்துவதற்கு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்கள் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின் மூலம் முன்மொழிந்துள்ளார். பூச்சிய அடிப்படையிலான வரவுசெலவுத்திட்ட முறையின் கீழ் முறையான மீளாய்வின் மூலம் செலவு நிகழ்ச்சித்திட்டங்களின் இரட்டிப்பாதல், விரயம், குறைந்த முன்னுரிமையுடனான செயற்பாடுகள் மற்றும் தற்போதுள்ள நிதி ஏற்பாட்டு ஒதுக்கங்களைப் பயன்படுத்துவதற்கு வினைத்திறன் மிக்கதும் பயனுள்ளதுமான வழிமுறைகள் இனங்காணப்பட்டுள்ளன. இதற்கிணங்க வருடாந்த வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டின் மூலம் உயர் நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்படும் பின்வரும் அமைச்சுக்கள் தொடர்பில் முறையான மீளாய்வொன்றைச் செய்யும் பொருட்டு பிரதி திறைசேரிச் செயலாளர் ஒருவரின் அல்லது திறைசேரி சிரேட்ட உத்தியோகத்தர் ஒருவரின் தலைமையில் 10 உத்தியோகத்தர்கள் குழுக்களை நியமிப்பதற்கு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு

* பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

* கல்வி அமைச்சு

* சுகாதார அமைச்சு

* கமத்தொழில் அமைச்சு

* பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு

* பாதுகாப்பு அமைச்சு

* பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

* நீர்ப்பாசன அமைச்சு

* நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு