• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-02-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அதிக கஷ்டமான நிதி நிலைமையின் மத்தியில் அத்தியாவசிய அரசாங்க சேவைகளை நடாத்திச் செல்தல்
– தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக அரசாங்க வருமானம் மொத்த தேசிய உற்பத்தியின் 8.3 வீதமான குறைந்த பெறுமதிக்கு வந்துள்ளது. இந்த நிலைமை சாதகமாகும் வரை பொதுமக்களுக்கான சேவைகளை நடாத்திச் செல்வதற்கு அத்தியாவசியமாக ஏற்கவேண்டிய மீண்டுவரும் செலவினங்களுக்காக மாத்திரம் கட்டு நிதிகளை விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கையினை எடுக்குமாறு திறைசேரிச் செயலாளருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.