• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-02-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிதி (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்
– அரசாங்க நிறுவனங்களுக்குச் சொந்தமான நிதியங்களை முறையாக முகாமிக்கும் நோக்கில் சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்தும் தேவை 2022 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவுசெலவுத்திட்ட பிரேரிப்பின் மூலம் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கிணங்க அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் ஏனைய அரசாங்க நிறுவனங்களினால் நடாத்திச் செல்லப்படும் நியதிச்சட்ட ரீதியிலான நிதியங்களை முறையாக கண்காணிப்பதற்கும் அதன் பொருட்டிலான நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காகவும் சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.