• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய விருது வழங்கல் (2023) - 'ஶ்ரீ லங்காபிமான்ய' விருதினை தேசபந்து கரு ஜயசூரிய அவர்களுக்கு வழங்குதல்
– இலங்கை சனநாயக சோசலிச குடியரசில் இலங்கையர்கள் சார்பில் பாரிய சிறப்பான சேவையினை நிறைவேற்றிய இலங்கையர்களுக்கும் இலங்கையர்கள் அல்லாதோருக்கும் அவர்களுடைய ஆயுட் காலத்தினுள் ஒரு தடவை மாத்திரம் உரியதாகும் தேசிய விருது வழங்கலானது 1986 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் ஒரு வழக்கமாகும். இதற்கிணங்க, 'ஶ்ரீ லங்காபிமான்ய' விருதானது இந்த நாட்டில் வழங்கப்படும் உயர் விருதாகும். தேசபந்து கரு ஜயசூரிய அவர்கள் ஆற்றிய சேவையினை மெச்சும் பொருட்டு அவருக்கு 'ஶ்ரீ லங்காபிமான்ய' விருதினை" 2023 பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதியன்று வழங்குவதற்கு மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் சம்பந்தமாக அமைச்சரவையின் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.