• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அவசர மின்சார தடைகளின் போதும் மின்சாரத்திற்கான கேள்வி உச்ச அளவில் நிலவுகின்ற சந்தர்ப்பத்திலும் மின்சார விநியோகம் தொடர்ச்சியாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மின்சாரத்தை களஞ்சியப்படுத்தி வைக்கும் முறைமையொன்றைத் தாபித்தல்
– கொரிய குடியரசிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள நன்கொடை உதவி தொடர்பிலான கட்டமைப்பு சமவாயத்தின் கீழ் அம்பாந்தோட்டை நெய்யறி துணைநிலையம் சார்ந்த 05 மெகாவொட் ஆற்றல் கொண்ட 08 மணித்தியாலம் மெகாவொட் வலுசக்கதியினை களஞ்சியப்படுத்தும் முறைமையொன்றைத் தாபிப்பதற்காக 14.3 மில்லியன் கொரிய வொன் (ஐக்கிய அமெரிக்க டொலர்கள் சுமார் 11.9 மில்லியன்) வழங்குவதற்கு கொரிய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க, இந்த கருத்திட்டத்தை ஆரம்பித்து நடைமுறைப்படுத்துவதற்கான கலந்துரையாடல் குறிப்பில் உரிய தரப்பினர்கள் கைச்சாத்திடும் பொருட்டு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.