2023-01-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலக பணிகளை நிருவகிப்பதற்கும் நிறைவேற்றுவதற்குமாக பாராளுமன்ற சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல் - சகல பிரசைகளுக்கும் பொருளாதார, சமூக, கலாசார மற்றும் அரசியல் ஆகிய துறைகளில் சம வாய்ப்பினை உருவாக்குதல், அடையாளத்தை பாதுகாத்தல், பல் நோக்கங்களுக்கான கௌரவம் மற்றும் மெச்சுவதற்கு ஆளாகும் சமூகமொன்றை உருவாக்குதல் அத்துடன் சகல பிரசைகளுக்கும் ஒற்றுமையாகவும் ஒத்துழைப்புடனும் வாழக்கூடிய சமூகமொன்றை உருவாக்கும் நோக்குடன் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகமானது தாபிக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்திற்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பில் கவனத்திற் கொள்ளும் போது அதன் செயற்பாட்டு பணிகளை விரிவுபடுத்துவதற்கும் அதேபோன்று சட்டமொன்றின் மூலம் இந்த அலுவலகத்தை நிரந்தர அலுவலகமொன்றாக தாபிப்பதும் பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இதன் பொருட்டு சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |