• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குற்றச் செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கும் மற்றும் பாதுகாக்கும் தினமொன்றை பிரகடனப்படுத்துதல்
- குற்றச் செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களினதும் சாட்சிகளினதும் சிறப்புரிமைகள் மற்றும் உரிமைகளை இனங்காண்பதற்கும் மேம்படுத்துவதற்குமாக முறையான பொறிமுறையொன்றை உருவாக்கும் பொருட்டு 2015 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க குற்றச் செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கும் மற்றும் பாதுகாக்கும் சட்டமானது அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. அதற்கிணங்க, குற்றச் செயல்களினால் பாதிக்கப்பட்டவர் களையும் சாட்சிகளையும் பாதுகாப்பதற்கான தேசிய அதிகாரசபையொன்று தாபிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நாளுக்குநாள் அதிகரித்துவரும் குற்றச் செயல்கள் காரணமாக பாதிக்கப்படுகின்ற பெண்கள், சிறுவர்கள் அடங்கலாக ஆட்களின் எண்ணிக்கையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, குற்றச் செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் பாதுகாப்பது தொடர்பில் சமூகம் அறிந்து கொள்ளும் நோக்கிலும் அதேபோன்று இது தொடர்பில் அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் அக்கறை கொள்ளும் நோக்கிலும் குற்றச் செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கும் மற்றும் பாதுகாக்கும் தினமொன்றை பிரகடனப்படுத்துவது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 2015 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க குற்றச் செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கும் மற்றும் பாதுகாக்கும் சட்டமானது செயல்வலுவாக்கம் செய்யப்பட்ட மார்ச் மாதம் 07 ஆம் திகதியை 'குற்றச் செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கும் மற்றும் பாதுகாக்கும் தினமாக' பிரகடனப்படுத்தும் பொருட்டு நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.