• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குதல்
- புதிய நலன்புரி நலன்களை செலுத்தும் திட்டமொன்றை துரிதமாக ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதோடு, இதன் பொருட்டு புதிய தகைமைகள் மற்றும் தகவுத் திறன்களைப் பயன்படுத்தி பயனாளிகளை இனங்காணும் கணக்கெடுப்பு தற்போது ஆரம்பிக்கப்பட்டு நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது நிலவும் நெருக்கடியான பொருளாதார நிலைமையின் மத்தியில் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள் முகங்கொடுக்க வேண்டிவரும் சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு 2023 ஆம் ஆண்டின் முதல் நான்கு (04) மாத காலத்திற்குள் நிதிச் சலுகையினை வழங்குவதற்கு 2023 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்பொது ஆரம்பிக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பினை பூர்த்தி செய்து, முன்மொழியப்பட்டுள்ள புதிய நலன்புரி நலன்கள் செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தும் வரை, சமுர்த்தி பயனாளிகள் உட்பட சமூகத்தில் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய குடும்பங்களுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள நிதிச்சலுகையினை 2023 மே மாதம் தொடக்கம் செப்ரெம்பர் மாதம் வரை மேலும் ஐந்து (05) மாதகாலத்திற்கு நீடிப்பதற்கு தேவையான நிதி ஏற்பாடுகளை வழங்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.