• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை
- 03 தசாப்தகால மோதல் முடிவுக்கு வந்த பின்னர் அடைந்துள்ள சமாதானத்தை முற்கொண்டு செல்வதற்கும் பாதுகாப்பதற்கும் அர்த்தமுள்ள வழிமுறையாக உண்மையைக் கண்டறியும் சுயாதீனமான, உள்ளூர் பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்தும் தேவை கண்டறியப்பட்டுள்ளது. மோதல் முடிவுக்கு வந்த பின்னர் நல்லிணக்கம் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கையில் சுயாதீன ஆணைக்குழுக்கள் சில தாபிக்கப்பட்டுள்ளன. இந்த ஆணைக்குழுக்களின் சிபாரிசுகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. அதற்கிணங்க, தயாரிக்கப்பட்டுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை தொடர்பிலான கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினாலும் மாண்புமிகு பிரதம அமைச்சரினாலும் கடற்றொழில் அமைச்சரினாலும் கல்வி அமைச்சரினாலும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினாலும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரினாலும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.