2023-01-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை மின்சார சபைக்கு அம்பாந்தோட்டை பிரதேசத்திலிருந்து மேலதிக காணித் துண்டொன்றை குத்தகை அடிப்படையில் வழங்குதல் - அரசாங்க காணி கட்டளைச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு கையளிக்கப்பட்டுள்ள அம்பாந்தோட்டை கேலியபுரவில் அமைந்துள்ள ஏக்கர் 03 றூட் 01 பேர்ச்சர்ஸ் 10.65 விஸ்தீரணம்கொண்ட காணித்துண்டை குத்தகை அடிப்படையில் 30 வருடகாலத்திற்கு மின்கம்பங்களை களஞ்சியப்படுத்தி வைக்கும் முனையமொன்றாக பயன்படுத்துவதற்காக இலங்கை மின்சார சபைக்கு கையளிப்பதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரினாலும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |