2023-01-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அடுத்த 25 ஆண்டுகள் - அடுத்த 25 ஆண்டுகளில் பொருளாதார, சமூக, கலாசார மற்றும் அரசியில் துறைகளில் மேம்பாட்டினை அடையும் நோக்கில் பின்வரும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றதென மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது.
(I) பின்வரும் புதிய நிறுவனங்களைத் தாபித்தல் : * வரலாற்று நிறுவகம் * பொருளாதார மற்றும் வர்த்தக நிறுவகம் * பெண்கள் மற்றும் பாலினத்திற்கான நிறுவகம் * அரச மற்றும் பொதுக் கொள்கை பல்கலைக்கழகம் * கமத்தொழில் தொழிநுட்ப பல்கலைக்கழகம் * காலநிலை மாற்றம் பற்றிய பல்கலைக்கழகம் * விளையாட்டு பல்கலைக்கழகம் (II) பின்வரும் நோக்கங்கள் கருதி புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துதல்: * தேசிய மகளிர் ஆணைக்குழு சட்டம் * பாலின சமத்துவ சட்டம் * பெண்கள் வலுவூட்டல் சட்டம் * சிறுவர் பராமரிப்பு சட்டம் * காலநிலை மாற்றம் பற்றிய சட்டம் * சமூக நீதி ஆணைக்குழு சட்டம் * காடு வளர்ப்பு மற்றும் மரக்காப்புச் சட்டம் * பயன்பாட்டிலுள்ள தனித்துவமான அமைவிடங்கள் சட்டம் - மகாவலி கங்கை சிங்கராசவனம் சிவனொலிபாத மலைப்பகுதி / வன உச்சி ஹோட்டன் சமவௌி நக்கல்ஸ் ஆதாம் பாலம் * கடல் வளங்கள் ஆய்வு மற்றும் முகாமைத்துவத்திற்கான சட்டம் (விசேட பொருளாதார வலயத்திற்குள்) * முத்துராஜவெல (பாதுகாப்பு) சட்டம் * மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சட்டம் (III) பின்வரும் புதிய கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் : * நகரப்புர காடுகள் 75 * குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு கொழும்பில் 1,996 வீடுகள் * தேசிய இளைஞர் மேடை தொடர்பிலான கருத்திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் |