• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொரிய சுற்றுலாத்துறை அமைப்பின் நிதி கொடையின் மீது இலங்கையின் மத்திய மற்றும் வடகிழக்கு வலயங்களை மையப்படுத்தி சமூக அடிப்படையிலான சுற்றுலா அபிவிருத்தி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
- இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான குச்சவௌி சுற்றுலா அபிவிருத்தி பிரதேசத்தை மையப்படுத்தி கொரிய சுற்றுலாத்துறை அமைப்பின் நிதியுதவியின் கீழ் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் 'சமூக அடிப்படையிலான கருத்திட்டமொன்றை' நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. கொரிய சுற்றுலாத்துறை அமைப்பின் பிரதிநிதிகள் குழுவொன்று உரிய கருத்திட்ட பிரேரிப்பு தொடர்பில் சாத்திய தகவாய்வினை மேற்கொண்டு உத்தேச மொத்த கருத்திட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கு தென்கொரிய வொன் 2.172 பில்லியன் நிதியுதவியை வழங்குவதற்கும் அதன் முதலாம் கட்டமாக உரிய சுற்றுலாத்துறை அபிவிருத்தி கருத்திட்டத்தின் மொத்த திட்டத்தை தயாரித்தல், பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் முன்னோடி பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல் என்பன சார்பில் தென்கொரிய வொன் 400 மில்லியன் கொண்ட கொடையினை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க, உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கொரிய சுற்றுலாத்துறை அமைப்புக்கும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடும் பொருட்டு சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.