2023-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரசாங்க காணிகளை பராதீனப்படுத்தும் ஆரம்ப வேலைகளை பிரதேச செயலாளர்கள் ஊடாக மாத்திரம் மேற்கொள்தல் - தற்போது மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழான காணிகளை பராதீனப்படுத்தவதற்கான அதிகாரம் இலங்கை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை பராதீனப்படுத்தும் அதிகாரம் குறித்த ஆணைக்குழுவுக்கும் கையளிக்கப்பட்டுள்ளன. துரித மகாவலி அபிவிருத்தித் திட்டம் மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழு என்பன உரிய நோக்கங்களை தற்போது பூர்த்தி செய்துள்ளமையினால் இந்த இரண்டு (02) நிறுவனங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் அரசாங்க காணிகளை பராதீனப்படுத்துதல் அடங்கலாக உரிய அனைத்து அடிப்படைச் செயற்பாடுகளும் பிரதேச செயலாளர்கள் ஊடாக மாத்திரம் மேற்கொள்வதற்குப் பொருத்தமான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டியுள்ளது. அதற்கிணங்க, அரசாங்க காணிகளை பராதீனப்படுத்துவதற்கு உரியதாக தற்போது நடைமுறையிலுள்ள அனைத்து சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளை ஆராய்ந்து, அறிமுகப்படுத்தவேண்டிய புதிய சட்ட திருத்தங்களை உள்ளடக்கி அரசாங்க காணிகளை பராதீனப்படுத்தல் தொடர்பான கொள்கையொன்றை வகுப்பதற்கும் தேவையான வழிகாட்டல்களைத் தயாரித்து சமர்ப்பிப்பதற்குமாக சனாதிபதியின் சிரேட்ட மேலதிக செயலாளர் ஒருவரின் தலைமையில் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு அமைச்சரவையின் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. |