2023-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பெலன்கஸ்துடுவை, பொரளை ஓவல் வீவ் ரெசிடென்சீஸ் வீடமைப்புக் கருத்திட்டத்தில் வீட்டு அலகுகளை இறையிலி அடிப்படையில் விற்பனை செய்தல் - அரசாங்க ஊழியர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள 608 வீட்டு அலகுகள் மற்றும் 05 வர்த்தக அலகுகளுடன் கூடிய 24 அடுக்குமாடிகளைக் கொண்ட பெலன்கஸ்துடுவை, பொரளை ஓவல் வீவ் ரெசிடென்சீஸ் வீடமைப்புக் கருத்திட்டத்தின் நிர்மாணிப்பு பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு 2020 ஆம் ஆண்டில் வீடுகளின் உரிமையானது குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 1978 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் குடியிருப்பாளர்களுக்கு இறையிலி உறுதிகளை வழங்கும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |